30.5 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

ஐயோ…இதன் விலையும் எகிறி விட்டதே…அதிர்ச்சியில் அசைவ பிரியர்கள்.!!

தமிழகத்தில் தொடர்ந்து  மீன்கள் விலையும் அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் அசைவ பிரியர்கள் சிக்கன் வாங்காமல் மட்டன், மீன்களை வாங்கி சமைத்து சாப்பிடுவதில்  கவனம் செலுத்துகின்றனர்.

இதில் ஏற்கனவே , மட்டன் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது மீன்கள் விலையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கன்னியாகுமரியில் இன்று மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதன்படி, நேற்று வஞ்சிரம் மீன்  கிலோ வுக்கு 700 ரூபாய் இருந்த நிலையில், இன்று கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதால் அசைவ பிரியர்கள் சாக்கில் உள்ளனர். மேலும் வருகின்ற ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் என்பதால், இன்னும் ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை உயர்வாகவே காணப்படும் என மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.