பொங்கல் பண்டிகை தின விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரபலம். இந்த ஜல்லிக்கட்டு வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வு தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த மருத்துவ குழுவில் 14 மருத்துவர்கள் உட்பட 50 பேர் உள்ளனர்.
இந்த உடற்தகுதி தேர்வில் சுமார் 700க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். 21 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இச்சோதனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சரியான உயரம், அதற்கேற்ற உடல் எடை, ரத்த பரிசோதனை ஆகியவை சோதனை செய்யப்பட்டது. மேலும், பிரஷர் அளவு, சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலோ வேறு வியாதிகள் இருந்தாலோ ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது.
சரியான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வருவாய்த்துறை சார்பாக முன்பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது. இச்சோதனை போக, அடுத்ததாக ஜனவரி 17ஆம் தேதி போட்டி நடைபெறும் நாளன்று மீண்டும் ரத்த அழுத்தம், மது குடித்துள்ளார்களா உள்ளிட்ட சில சோதனைகள் செய்யப்பட்டு போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…