திருவனந்தபுரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விண்ட்ஷீல்ட் வெடித்ததால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திடீரென அதன் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை 7.52 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட விமானம், கண்ணாடியில் விரிசல் இருப்பதை விமானிகள் கவனித்த பின்னர், ஒரு மணி நேரத்திற்குள் விமான நிலையத்திற்கு திரும்பியது.
காலை 8.50 மணிக்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அது சரக்குகளை மட்டுமே எடுத்துச் சென்றதாகவும் அதில் பயணிகள் யாரும் இல்லை என்றும் அதிகாரி தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளின் கூறுகையில், இந்த விமானம் சவுதி அரேபியாவின் தம்மம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவிலிருந்து இந்தியா திரும்பும் இந்திய குடிமக்களை அழைத்து வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
விண்ட்ஷீல்ட் விரிசல் காரணமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில், விமானிகள் உட்பட அனைத்து குழு உறுப்பினர்களும் பாதுகாப்பாக இருப்பதாக திருவனந்தபுரம் விமான நிலைய இயக்குனர் சிவி ரவீந்திரன் தெரிவித்தார்.
மேலும், விமானத்திற்கு முந்தைய சோதனையில் விரிசல் கண்டறியப்பட்டிருந்தால், விமானம் புறப்பட்டிருக்காது என்றும் புறப்படும் போது அல்லது பயணத்தின் போது இது நடந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…