எய்ம்ஸ் மருத்துவமனை…தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதைத்தான் சொன்னார் – எல் முருகன்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95% முடிந்ததாக ஜே.பி. நட்டா பேசியது குறித்து அமைச்சர் எல்.முருகன் விளக்கம்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தார். அப்போது, மதுரையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% நிறைவடைந்து உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும் கூறியிருந்தார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% நிறைவடைந்ததாக தெரிவித்த ஜே.பி.நட்டாவின் பேச்சிற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் கிளம்பின. எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்திற்கு சென்று மருத்துவமனை பணிகள் எங்கே நடக்கிறது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்ப கட்ட பணிகள் தான் 95% முடிவடைந்துள்ளதாக ஜேபி நட்டா கூறினார்.

அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர். என்ன சொல்லுகிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வேற்று விளம்பரத்துக்காக அந்த இடத்திற்கு சென்று புகைப்படம் போடுவதை தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் மானத்தை காப்பற்றுங்க என தெரிவித்தார். இதன்பின் பேசிய எல் முருகன், திமுக எம்பி ஆ.ராசாவின் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுகவின் மூன்றாம் கட்ட பேச்சாளர்கள் வேற்று விளம்பரத்திற்காக பேசுவதாக நினைத்துக் கொள்ள வேண்டும்.

இந்து மக்களை கீழ்த்தரமாக அவமதிப்பதை மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகுட்டுவார்கள். தேர்தல் சமயத்தில் பாஜக வெற்றிவேல் யாத்திரை நடத்தியது. அப்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் பயந்துகொண்டு கையில் வேல் புடித்தார். வாக்குக்காக இந்து மக்களை ஏமாற்றும் செயலை திமுக செய்வதை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமாக, நாடு மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திக்க வேண்டும் என கூறினார். மேலும், ராகுல் காந்தி நடைபயணம் ஆரம்பத்திலேயே தோல்வி, அவர் இந்த பயணத்தை தொடங்கிய போதே கோவாவில் காங்., எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து வெளியேறினர். அவர் காஷ்மீர் செல்வதற்குள் காங்., கட்சியே காணாமல் போய்விடும் என்றார்.

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

7 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

7 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

13 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

13 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

14 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

14 hours ago