தமிழ்நாடு

அனுமதியளித்த சபாநாயகர்.. அவை நிகழ்வில் பங்கேற்கவில்லை – அதிமுக அறிவிப்பு.!

சென்னை : கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து தங்களை பேசவிடாத காரணத்தால் அவை நிகழ்வை அதிமுக புறக்கணித்துள்ளது.

தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்றனர். சட்டப்பேரவை தொடங்கியதும் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரத்தை விவாதிக்கக் கோரி அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

இந்நிலையில், அவை நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில், அதிமுக உறுப்பினர்கள் செயல்பட்டதால் இன்று ஒருநாள் சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க பேரவை தலைவர் தடை விதித்தார்.

இதையடுத்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, சபாநாயகர் தனது நடவடிக்கையை ரத்து செய்து, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க அதிமுக எம்எல்ஏ -க்களுக்கு, சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார்.

ஆனால், சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பியதால் அவர்களை சபாநாயகர் அப்பாவு வெளியேற்றிய நிலையில், அவை நிகழ்வில் பங்கேற்கவில்லை என அதிமுக அறிவித்துவிட்டு, சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.

தற்போது, சட்டப்பேரவைக்குள் வருமாறு சபாநாயகர் அழைப்பை நிராகரித்த அதிமுகவினர், ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், ஆளுநர் ரவியை சந்திக்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அனுமதி மறுப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் கள்ளச்சாராய மரணம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி தரவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையாக நடக்கவில்லை. பேச அனுமதி வேண்டி தொடர்ந்து குரல் கொடுத்தோம் என்பதால் எங்களை வெளியேற்றியுள்ளனர். மக்களின் பிரச்னையை பேசவிடாமல் எங்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் போக்கு கண்டனத்திற்குரியது.

Recent Posts

பிரிட்டன் தேர்தலில் வெற்றி வாகை சூடிய இந்திய வம்சாவளியினர்…

UK தேர்தல்:  பிரிட்டன் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி 7 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். 650 இடங்களை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நேற்று…

28 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல் ..ஸ்ருதியின் அம்மாவால் தெரியவரும் உண்மைகள்..!

சிறகடிக்க ஆசை இன்று -விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [ஜூலை 5] கதைக்களத்தை இங்கே காணலாம். ரவியும் ஸ்ருதியும் கேக்கோட வீட்டுக்குள்ள…

41 mins ago

முந்துங்கள் வருங்கால வங்கி ஊழியர்களே …! UCO வங்கியில் அப்ரண்டிஸ் வேலை ..!

UCO வங்கி : யுனைடெட் கமர்ஷியல் வங்கி லிமிடெட் (UCO) வங்கியில் அப்ரண்டிஸ் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் 544…

1 hour ago

நல்லா நோட் பண்ணிக்கோங்க மக்களே! நாளை இந்த இடங்களில் மின்தடை!

மின்தடை  : நாளை ( ஜூலை 6 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். தென் சென்னை - ஐய்யப்பன்தாங்கல் காட்டுப்பாக்கம்,…

1 hour ago

எடப்பாடி பழனிச்சாமி ஓர் நம்பிக்கை துரோகி.? அண்ணாமலை கடும் தாக்கு.!

விழுப்புரம்: நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கு பொருத்தமாக இருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.. இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

1 hour ago

ராத்திரி வேளையில் அடர்ந்த காட்டுக்குள் ராஷ்மிகா.. கட்டுக்கட்டாக பணம் எடுத்த காட்சி.!

குபேரா : இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் 'குபேரா' படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர்.…

2 hours ago