திடீர் உடல் நலக்குறைவு…மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

Mansoor Ali khan: பிரச்சாரத்தின் போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்றைய தினம் அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் மன்சூர் அலிகானை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

தற்பொழுது, அவருக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மிகவும் முடியாத நிலையில் மன்சூர் அலிகான் இருப்பதாக தெரிகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.