20 கோடியை இழந்த நடிகை நயன்தாரா.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

நடிகை நயன்தாரா தற்போது திருமணம் முடிந்ததை தொடர்ந்தும் நடிப்பை நிறுத்தாமல் தொடர்ந்து படங்களில் நடித்தும் புது படங்களில் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், அவர் 2 பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பையும், 20 கோடி பணத்தை இழந்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Nayanthara
Nayanthara Image Source Google

அதன்படி, நயன்தாராவிடம் பெரிய தயாரிப்பாளர் ஒருவர் 1 படத்திற்கு 10 கோடி சம்பளம் என்ற கணக்கில் 20 கோடி சம்பளம் பேசி 2 படங்களில் அவர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். அதற்கு நயன்தாராவும் முதலில் சம்மதம் தெரிவித்துள்ளாராம். எனவே, 2 படங்களில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு அந்த தயாரிப்பாளர் 20 சம்பளம் கொடுத்துள்ளாராம்.

Nayanthara Sad
Nayanthara Sad Image Source Twitter

பிறகு, நயன்தாராவால் அந்த படப்பிடிப்பில் குறித்த நேரத்தில் கலந்துகொள்ள முடியவில்லையாம். இதனால் தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவை படத்திலிருந்து நீக்கியதுமட்டுமின்றி, சம்பளத்தையும் திரும்ப பெற்றதாம். இதனால் நயன்தாராவும் சற்று அப்செட்டில் இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.

Nayanthara
Nayanthara Image Source Twitter

மேலும், நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment