நடிகை நல்லெண்ணெய் சித்ரா காலமானார்.!

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார்.

இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சித்ரா. இந்த படத்தை தொடர்ந்து ரஜினியின் ஊர்க்காவலன், கே.எஸ்.ரவிக்குமாரின் சேரன் பாண்டியன் படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக, பொண்டாட்டி ராஜ்ஜியம் உள்பட  பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,  தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடிகை சித்ரா நடித்துள்ளார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமானதால் ‘நல்லெண்ணெய் சித்ரா’ என்று அழைக்கப்பட்டார். கடைசியாக இவரது நடிப்பில் என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார். இந்த படம் கடந்த ஆண்டு 2020 ஜனவரி மாதம் 3- ஆம் தேதி வெளியானது.

இந்த நிலையில், சென்னையில் சாலிகிராமத்தில் கணவர் மற்றும் மகளுடன் வசித்துவந்த சித்ரா நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.