நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி…!!

நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகையான கங்கனா ரணாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் அவர் தெரிவித்திருப்பது ” கடந்த சில நாட்களாகவே நான் சோர்வாக உள்ளேன்.  என் கண்ணில் எரிச்சலாக உள்ளது. இமாசலப் பிரதேசத்துக்குச் செல்வதற்காகப் பரிசோதனை செய்தேன் அப்போது எனக்கு  தொற்று தொற்று இருப்பது உறுதியானது. நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.