நடிகை தீபிகா படுகோன் திடீரென மருத்துவமனையில் அனுமதி.!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நேற்று இரவில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக பதான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், தீபிகா படுகோனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். அவர் வீட்டில் இருந்தபோது அவருக்கு ஒரு விதமான லேசாக மயக்க ஏற்பட்ட நிலையில், உடனடியக அவர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது தீபிகா படுகோன் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால், எந்த காரணத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறித்தோ தீபிகா படுகோன் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment