தொடர் விடுமுறையில் கல்லா கட்டும் ஆடு ஜீவிதம்! மொத்தம் இத்தனை கோடியா?

Aadujeevitham Box Office: நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் ‘ஆடு ஜீவிதம்’ 2வது நாளில் ரூ.6.50 கோடி வசூலித்துள்ளது.

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் கடந்த வியாழன் (மார்ச் 28) அன்று திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் சிறப்பான வரவேற்பை பெற்று மலையாள பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜூக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கும்  ‘ஆடு ஜீவிதம்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ளது.

முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.7.6 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. முதல் நாளில் உலக அளவில் இப்படம் முதல் நாளில் ரூ.16.7 கோடி வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்றைய தினம் விடுமுறை என்பதால், ரூ.15 கோடி வசூல் செய்திருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக முழுவதும் மொத்தம் ரூ.30 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் நாளையும் தொடர் விடுமுறை என்பதால், இன்னும் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.