நடிகர் அர்ஜுன் ராம்பால் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை.!

நடிகர் அர்ஜுன் ராம்பால் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடைபெற்றுள்ளது.

மும்பையில் உள்ள நடிகர் அர்ஜுன் ராம்பாலின் வீட்டை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) சோதனை நடத்தி வருவதாக தகவல்கள்வெளியாகியுள்ளது.

தற்போது, இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து இந்தி திரையுலகிற்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

அண்மையில், ராம்பாலின் கூட்டாளர் கேப்ரியெல்லாவின் சகோதரரான அகிசிலாஸ் டெமெட்ரியேட்ஸை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர், மேலும் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதிலும், மற்றொரு போதை மருந்து வழக்கில் டெமெட்ரியேட்ஸ் மீண்டும் காவலில் வைக்கப்பட்டார்.

இதற்கிடையில், என்.சி.பி. ஸ்லூத் குழுவினர் நாடியாட்வாலாஸின் இல்லத்தில் தேடி 10 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.