மூடுபனியால் வாகனங்கள் மோதி விபத்து..! பரபரபான சம்பவம்..!

ஆக்ரா-கான்பூர் நெடுஞ்சாலையில் மூடுபனி காரணமாக குறைந்தது 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது.

டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக சாலைகள் முற்றிலுமாக பனியால் மறைக்கப்பட்டதால் விபத்துகள் பெருமளவில் நடக்கின்றன. இந்நிலையில் உத்திர பிரதேசம் ஆக்ராவிலிருந்து கான்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் அடர்ந்த மூடுபனி காரணமாக கிட்டத்தட்ட 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு எட்டாவாவிலிருந்து மதுராவுக்குச் சென்று கொண்டிருந்த மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்தும் ஏற்கனவே மோதலில் சிக்கிய டிரெய்லர் டிரக் மீது மோதியுள்ளது. பயணிகளுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

மாநில அரசின் சுரங்கத் துறையின் அதிகாரிகள் சோதனைக்காக ஒரு லாரியை நிறுத்தியதால் அதன் பின்னால் வந்த வாகனங்கள் அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recent Posts

IPL2024: மழையால் இன்றைய போட்டி ரத்தானது..!

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…

9 hours ago

காசுலாம் போச்சு .. ஆர்சிபி-சிஎஸ்கே போட்டியை பார்க்க டிக்கெட் புக் செய்த ரசிகர் ! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !!

சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…

13 hours ago

3 நொடியில் 100 கி.மீ ஸ்பீடு.. அசுர வேகத்தில் களமிறங்கிய BMW M 1000 XR.!

சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…

13 hours ago

பிளாங்க் உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க .!

Plank exersize-பிளாங்க்  உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…

13 hours ago

மற்றவர்களை கவனிப்பது என்னோட வேலை இல்லை! விமர்சனங்கள் குறித்து இளையராஜா!

சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.  இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…

13 hours ago

அத்துமீறிய இலங்கை மீனவர்கள்.. 14 பேரை கைது செய்த இந்திய கடற்படை.!

சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…

13 hours ago