மும்பையில் புறநகர் ஏசி ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்.!

மும்பையில் நகர்ப்புற ஏசி ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. மேற்கு ரயில்வே 10 ஏசி ரயில்கள் உட்பட 194 சிறப்பு சேவைகளை இன்று முதல் இயக்குகிறது.

சிறப்பு புறநகர் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

சமூக இடைவெளியை பின்பற்றபதற்கும், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கும், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தினசரி சிறப்பு புறநகர் சேவைகளின் எண்ணிக்கையை 506 முதல் 700 ஆக உயர்த்துவதற்கான முடிவை மேற்கு ரயில்வே எடுத்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.