அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.!

அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகாவை ஒட்டியுள்ள அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்தில் சில இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

இதனால் சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கக்கூடும் என்றும் சென்னையின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், தஞ்சாவூர், (பாரூர்) கிருஷ்ணகிரி, (புலிப்பட்டி) மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment