மெக்சிகோவில் திடீரென ஏற்பட்ட 50 அடி ஆழம் கொண்ட பள்ளம்…! பீதியில் உறைந்த மக்கள்…!

  • மெக்சிகோ நாட்டில், சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கி, ஒரு பெரிய பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது.
  • இந்த பள்ளம் சுமார் 200 அடி அகலமும், 50 அடி ஆழம் கொண்டதாக காணப்பட்டது.

மெக்சிகோ நாட்டில், சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கியது. இதனையடுத்து அங்கு ஒரு பெரிய பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது. இந்த பள்ளம் சுமார் 200 அடி அகலமும், 50 அடி ஆழம் கொண்டதாக காணப்பட்டது. இந்த பள்ளத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எந்த நேரத்திலும் மீண்டும் பெரிதாகலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த பள்ளம் ஏற்படுவதற்கு முன்பதாக இடி இடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக அந்த நிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். திடீரென்று நிலம் உள்வாங்கியதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பூகம்பம் ஏற்படப் போகிறது என்று பீதி அடைந்து அப்பகுதியை விட்டு ஓடியுள்ளனர். பின் பயத்தில் இருந்து மீண்ட மக்கள் எச்சரிக்கையுடன் சென்று அப்பளத்தை பார்த்துள்ளனர்.

அந்த பள்ளத்தில் நீர் நிரம்பி மிகப் பெரிய கிணறு போன்று காணப்பட்டுள்ளது. இது குறித்து புவியியல் ஆய்வாளர்கள் கூறுகையில், குறிப்பிட்ட இடத்திற்கு கீழே பூமியில் பாறைகள் குறைவாக இருப்பதும், திடீரென நீரோட்டம் ஏற்பட்டாலும் இதுபோன்ற பள்ளம் தோன்றும் என்றும்,  பூமியின் மேற்பாறையை நீரோட்டம்  கரைப்பதாலும் இப்படிப்பட்ட பள்ளம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த பள்ளம் சிங்க்ஹோல் என்று அழைக்கப்படுகிறது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

38 mins ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

7 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

12 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

13 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

13 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

13 hours ago