தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

  • தமிழகத்தில் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவித்துள்ளது. 

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாறும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஒடிசா அருகே கடந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும், பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள்  ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.