ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷ் கொலை.! 2 பேர் கைது

கடலூர் மாவட்டம் கீழ் அருங்குணம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷ் நேற்று மாலையில் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஏற்கனவே திமுக ஊராட்சி மன்ற தலைவர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது விசிக ஊராட்சி மன்ற தலைவரும் கொல்லப்பட்டார்.

இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ள நிலையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலை குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சுபாஷ் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.