மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு குடியேறினார் திரிபுரா முன்னால் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்!

20 ஆண்டுகள் திரிபுராவில் முதலமைச்சராக ஆட்சி செய்த மாணிக் சர்க்கார், தற்போது கட்சி அலுவலகத்தில் ஒரே ஒரு அறை கொண்ட பகுதியில் மனைவியுடன் குடியேறியுள்ளார். பா.ஜ.க. வெற்றி பெற்றதும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய மாணிக் சர்க்கார் மறுநாளே அரசு வீட்டில் இருந்து தங்களது உடைகள் மற்றும் புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யாவுடன் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று  குடியேறினார்.

இந்தியாவிலேயே ஏழ்மையான முதலமைச்சர் என அறியப்படும் மாணிக் சர்க்காருக்கு 900 சதுரடியில் பூர்வீக வீடு மட்டுமே சொத்தாக உள்ளது. அதிலும் அவர்களின் உறவினர்கள் தங்கியுள்ளதால் கட்சி அலுவலகத்தில் உள்ள ஒரே ஒரு அறையில் மனைவியுடன் தங்கியுள்ளார்.  தங்களது புத்தகங்களையும் கட்சி நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ள அவர்கள், தினமும் கட்சி அலுவலக சமையலறையில் அனைவருக்கும் என்ன சமைக்கிறார்களோ அதுவே தங்களுக்கும் உணவாக வழங்கினால் போதும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment