ஐயோ எங்க தீவை காணோம்!! கதறும் பாகிஸ்தான் மக்கள்

தமிழ் சினிமாவில் கிணற்றை காணோம் என்று வடிவேல் போலீஸிடம் கூறியதை போல், பாகிஸ்தான் மக்கள் தங்களில் தீவை காணவில்லை என்று கதறி வருகின்றனர்.

பாகிஸ்தான் அருகே நிலநடுக்கத்தினால் உருவான சிறிய தீவு கடலில் மூழ்கியுள்ளது. இந்த படங்களை செயற்கைகோள் மூலம் நாசா வெளியிட்டது.

2013ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகம் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 825 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் ரிக்டர் அளவு 7.7 ஆக பதிவானது.

Image result for பாகிஸ்தான் அருகே நிலநடுக்கத்தினால் உருவான சிறிய தீவு கடலில் மூழ்கியுள்ளது | #IslandDisappeared

இந்த நிலநடுக்கதால் கடலுக்கு அடியில் டெக்டோனிக் தட்டு நகர்ந்த பொது, திடீரென மண், பாறைகள் ஒருவித வாயுக்களுடன் வெளியேறி, ஒரு தீவாக உருவானது. செல்சலாகோ என பெயரிடப்பட்ட அந்த தீவு, காலப்போக்கில் கடலில் மூழ்கி காணாமல் போனது. செயற்கைகோள் படங்களை வைத்து பார்க்கையில், தீவு இருந்த இடம் தெரியாமல் போனது.