காங்கிரஸ் மத்திய அரசு திட்டங்களை நிறுத்துகிறது…மோடி குற்றச்சாட்டு…!!

சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்த முயன்று வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் விரைவாக தேர்தல் பிரச்சாரப் பணியை செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணி குறித்தும் அரசியல் கட்சிகளுக்குள் பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் , சத்தீஸ்கர் மாநிலம் ராய்காட் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை மாநில காங்கிரஸ் அரசு திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.மேலும் சத்தீஸ்கர் மாநிலம் C.B.I_யை அனுமதிக்க பயப்படுவது ஏன் என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார் .

 

Leave a Comment