ஹெச்.டி.எப்.சி. வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சங்வி திடீரென காணாமல் போயிருக்கிறார்.
ஹெச்.டி.எப்.சி. வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சங்வி மும்பை மலபார் ஹில் பகுதியில் வசிக்கிறார். மனைவி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்த அவர் புதன்கிழமை அலுவலகம் சென்ற பின் வீடு திரும்பவில்லை.அவரை மொபைல் மூலம் தொடர்புகொள்ள முயன்றபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில் மும்பை போலீசார் கமலா மில் வளாகத்தில் உள்ள ஹெச்.டி.எப்.சி. வங்கி அலுவலகத்தில் விசாரித்துள்ளானர். சித்தார்த் கிரண் சங்வி புதன்கிழமை இரவு சுமார் ஏழரை மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பியதாகத் தெரிந்துள்ளது. ஆனால், சிசிடிவி கேமரா பதிவுகளை சோதித்தபோது, அவரது கார் அலுவலகத்திலிருந்து சென்ற காட்சி ஏதும் இல்லை.
இதனிடையே வெள்ளிக்கிழமை மாலை ஐரோலி பகுதியில் ரத்தக் கறையுடன் சித்தார்த் கிரண் சங்வியின் மாருதி இக்னிஸ் காரை போலீசார் கண்டுள்ளனர். சங்வி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்கின்றனர்.இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…