இன்று தனது 74வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது ‘சுதந்திர’ இந்தியா.!

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா, ஆங்கிலேய அரசின் அதிகாரத்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. உலகின் மிகப்பெரிய சுதந்திர ஜனநாயக நாடாக உருவெடுத்து இன்றுடன் 73ஆண்டுகள் நிறைவடைந்து 74வது சுதந்திர ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது சுதந்திர இந்தியா.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது 74 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாள் இன்று. இந்த சுதந்திரத்திற்காக பல லட்சக்கணக்கானோர் தங்கள் உயிரை துட்சமென மதித்து நமக்காக நமது சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் என்பது இன்று நாம் நினைவுகூரத்தக்கது.

1757 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி என்ற வணிக நிறுவனத்தை கட்டமைத்தது. அதன் பின்னர், அவர்களின் சூழ்ச்சி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்து மக்களை அடிமை படுத்தி சுமார் 400 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர்.

1857ஆம் ஆண்டு முதல் சுதந்திர போராக அறியப்பட்ட சிப்பாய் புரட்சி உருவானது. அதனை ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். அதன் பின்னர், புரட்சி படைகள் மூலமும், அகிம்சை போராட்டங்கள் மூலமும் லட்சக்கணக்கானோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினர்.

அதில் மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டம் கோடிக்கணக்கான இந்தியார்களை ஒன்று சேர்த்தது. இதனால், ஆங்கிலேயர்களின் ஆட்சி ஆட்டம் கண்டது. 1947இல் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.

இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றிற்காக அன்று பல லட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை துறந்திருக்கிறார்கள். அந்த தியாகிகளை நினைவுகூர்ந்து அந்த சுதந்திரத்தை பேணி பாதுகாப்பது நம் இந்தியர் ஒவ்வொருவரின் கடமை.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

48 mins ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

60 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

2 hours ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

2 hours ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

3 hours ago