ஆப்கன் பள்ளியில் குண்டுவெடிப்பு – 7 பேர் பலி..!

ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை தற்போது 7 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கிழக்கு மாகாணமான கோஸ்டில் இருக்கும் மதப்பள்ளி ஒன்றில் கையெறி குண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.