6-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் …!அமைச்சர் செங்கோட்டையன் அரைமணி நேரமாக ஆலோசனை…!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலாளருடன் தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி அரை மணி நேரம் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்கள்.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில்  சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஏராளமான ஆசிரியர்கள்  மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், குணமடைந்த பின்னர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலாளருடன் தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி அரை மணி நேரம் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்கள். வரும் 7-ம் தேதி ஒருநபர் குழு அறிக்கை தாக்கல் செய்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கடிதம் அளிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment