உளுந்தூர்பேட்டை அருகே இடி தாக்கி 60 ஆடுகள் பலி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இடி தாக்கி 60 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள உ.செல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவர் விவசாயம் செய்துவருகிறது. தனக்கு சொந்தமான தன்னுடைய விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அவரின் ஆடுகள் வயலில் கட்டப்பட்டிருந்தது.

நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இடிதாக்கிய காரணத்தால் அங்கு கட்டப்பட்டிருந்த 60 ஆடுகள் கருகி பலியானது. இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறை விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடிதாக்கி தனது 60 ஆடுகள் உயிரிழந்ததால் விவசாயி ராமசந்த்திரன் சோகத்தில் உள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.