கடவுளுக்கு பிரசாதமாக வைக்கப்பட்ட ஆப்பிள்.. 6 வயது சிறுவன் அடித்து கொலை..

கடவுளுக்கு வைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 6 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின், கயாவில் உள்ள ஒரு பள்ளியில் துர்கா தேவிக்கு வைக்கப்பட்ட பிரசாதத்தில் இருந்து ஆப்பிள் பழத்தை எடுத்து சாப்பிட்டதற்காக 6 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த விசாரணையில், பள்ளியின் உரிமையாளர்கள் அந்த 6 வயது சிறுவனை ஒரு அறைக்குள் வைத்து கொடூரமாக தாக்கியதாகவும், பின்னர் அந்த சிறுவன் பள்ளி வளாகத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டதாகவும் சிறுவனின் தாத்தா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட பள்ளி உரிமையாளர்கள் தற்போது கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment