கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. கொத்தனார் வேலை செய்த இவர் கடந்த 11.07. 2017 அன்று தீர்த்தம்பாளையம் கிராமத்துக்கு கட்டட வேலைக்காக சென்ற போது அந்த கிராமத்தை சேர்ந்த ராமு என்பவருடைய இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதுகுறித்து சிறுமியின் தாயார் சோபனா சிதம்பரத்திலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர் பழனிசாமியை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் ஒரு வருடமாக நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், சிறுமிகளை பாலியல் துன்புறுத்துவதை தடுக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ், குழந்தையை வன்கொடுமை செய்த பழனிச்சாமிக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், மற்றொரு வழக்கு பிரிவில் 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என இன்று தீர்ப்பு வழங்கினார்.
DINASUVADU
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…