மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தால் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பகல்கர் மாவட்டத்தில் தஹனா என்ற பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு திடீரெனெ தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அந்த இடத்தில் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளார். இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து அங்கு இருந்த தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்த விசாரணையில் தற்போது காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.