கர்நாடகாவில் 60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கோணிப்பைகளில் போட்டு வீசப்பட்ட நிலையில், 46 குரங்குகள் உயிரிழந்துள்ளது.
கர்நாடகாவிலுள்ள ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூர் எனும் பகுதியில் நேற்றிரவு 60க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டு கோணிப்பைகளில் கட்டி போட்டு சக்லேஷ்பூர் மற்றும் பேகூர் இடையே உள்ள சாலையில் வீசி உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் கோணிப்பைக்குள் இருந்த 14 குரங்குகள் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த குரங்குகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
மேலும், மீதமுள்ள 46 குரங்குகள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கோணிப்பைகளில் அடைத்து வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் காவல்துறையினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குரங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கர்நாடக காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…