Bihar Elections: 3 மணி நிலவரப்படி 45.85% வாக்குகள் பதிவு!

பீகார் சட்டமன்ற தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி, 45.85% வாக்குகள் பதிவாகியுள்ளது.

கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி 19 மாவட்டங்களில் உள்ள 78 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தமாக 1204
வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வாக்குச்சாவடியில் முறைகேடுகள், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளர். இந்நிலையில், 3 மணி நிலவரப்படி அம்மாநிலத்தில் 45.85% வாக்குகள் பதிவாகியுள்ளது.