மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 சீனர்கள் உட்பட 4 பேர் !கொரோனா வைரஸ் பாதிப்பா ? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 சீனர்கள் உட்பட 4 பேருக்கும்  கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால் உலகின் பிற நாடுகளும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 811 பேர் உயிரிழந்த்துள்ளனர். கொரோனா வைரசால்  37,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த வைரஸ் இதுவரை இந்தியாவில் கேரள மாநிலத்தில் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசுகளும்,மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.வைரஸ் அறிகுறிகள் குறித்து வரும் நபர்களுக்கு சோதனை மேற்கொள்ள சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 சீனர்கள் உட்பட 4 பேருக்கும்  கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை.4 பேரையும் தனி வார்டில் வைத்து பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்பது உறுதியாகியுள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Recent Posts

தோட்டத்தில் எரிந்த நிலையில் நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் உடல் மீட்பு.!

Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…

9 mins ago

தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

35 mins ago

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா அரண்மனை 4? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…

43 mins ago

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை.. 39 பேர் பலி.. 70 பேர் மாயம்.!

Heavy Rain in Brazil:  பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…

49 mins ago

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…

55 mins ago

அவதூறு வழக்கு… கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வாகனம் விபத்தில் சிக்கியது.!

Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…

1 hour ago