பேருந்து மீது டிரக் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு!!

உத்தரபிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த அடுக்குமாடி பேருந்து மீது வேகமாக வந்த டிரக் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

ராமநகர் காவல் நிலையப் பகுதியில் இன்று(செப் 3) அதிகாலை 3:30 மணியளவில் நேபாளம்-கோவா பேருந்து பஞ்சரான டயரை மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த அடுக்குமாடி பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

விபத்தின் போது 14 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாகவும் அதில் 4பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவத்தையடுத்து நேபாள-கோவா பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளையும் நேபாளத்திற்கு திருப்பி அனுப்புமாறு பாரபங்கி எஸ்பி கூறினார்.

author avatar
Varathalakshmi

Leave a Comment