மருந்து தொழிற்சாலையில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலி..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு.

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள பர்வாடா மண்டலில் உள்ள மருந்தகத்தில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி காவல்துறையினர் தெரிவிக்கையில் திங்கள்கிழமை மதியம் 3 மணியளவில் பார்மா நகரில் உள்ள லாரஸ் நிறுவனத்தின் யூனிட்-3ல் வாயு கசிவு ஏற்பட்டது.

சில தொழிலாளர்கள் எரிவாயு கசிவைத் தடுக்க முயன்றனர், ஆனால் திடீரென்று ஒரு வெடிப்பு ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து தீ ஏற்பட்டது. இதில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2 பேர், நிரந்தரத் தொழிலாளர்கள் 2 பேர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்,படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment