இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்துள்ளனர்.
இன்று இந்தியா, இங்கிலாந்து இடையே 2-ம் ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், தவான் இருவரும் களமிறங்கினர்.
ஆனால், கடந்த போட்டியில் 98 ரன்கள் விளாசிய தவான் இன்றைய ஆட்டத்தில் தொடக்கத்திலே 4 ரன்னில் வெளியேறினார். பின்னர், கேப்டன் கோலி களமிறங்கினார். அடித்து விளையாட தொடங்கிய ரோஹித் 25 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் இறங்கிய கே .எல் ராகுல், கேப்டன் கோலி உடன் இணைந்து சிறப்பாக விளையாடினர். இவர்கள் கூட்டணியில் 100 ரன்னிற்கு மேல் அடித்தனர்.
கோலி கடந்த போட்டி போல இந்தப்போட்டியிலும் அரைசதம் அடித்தார். இதைத்தொடர்ந்து, கோலி 66 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரிஷாப் பண்ட் கே .எல் ராகுலுடன் சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்கள் கூட்டணியிலும் 100 ரன்னிற்கு மேல் அடித்தனர். அதிரடியாக விளையாடி வந்த கே .எல் ராகுல் சதம் விளாசி 108 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்த சில நிமிடங்களில் ரிஷாப் பண்ட் அரைசதம் அடித்து 77 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர், ஹர்திக் பாண்டியா 35, க்ருனால் பாண்டியா 12* களத்தில் நின்றார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்துள்ளனர்.
இங்கிலாந்து அணியில் சாம் கரண், அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டும், டாம் கரண், ரீஸ் டோப்லி தலா 2 விக்கெட்டையும் பறித்தனர். இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது.
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…