சிவகங்கை அருகே கோர விபத்து : 3 பேர் பலி..6 பேர் படுகாயம்!

சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன், அவரது மனைவி காளியம்மாள் உட்பட 12 பேர் பழனியில் உள்ள தண்டாயுதபாணிசுவாமி கோவிலுக்கு டாடா ஏஸ் வேனில் சென்றார்கள்.

அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பு கொண்டு இருந்த சமயத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தளக்கா வயல் என்னும் இடத்தில் இன்று அதிகாலை அருகே வந்த லாரி மீது டாடா ஏஸ்
வேண் மோதி கோர விபத்து ஏற்பட்டது.

கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் தான்.. அமைச்சர் சேகர்பாபு

இந்த கோர விபத்தில் அழங்குளத்தைச் சேர்ந்த என்.நம்புராஜன் (60), அவரது மனைவி காளியம்மாள் (55) மற்றும் வாகனத்தின் ஓட்டுநர் ஐ.முகமது அன்வர் (38) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படு காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். இந்த கோர விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணை செய்தும் வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.