புதுடில்லி: உடல் நலக்குறைவால் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த 2 பாகிஸ்தானியர்களுக்கு சுஷ்மா விசா வழங்க உத்தரவிட்டுள்ளார்.பாராட்டு:மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சமூக வலை தளங்கள் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிகிச்சைக்காக பல பாகிஸ்தானியர்கள் சிகிச்சைக்கு விசா கேட்டு டுவிட்டர் சுஷ்மாவிடம் உதவி பெற்றுள்ளனர்.இருதய அறுவை சிகிச்சை:இந்நிலையில் பாகிஸ்தானனில் லாகூரை சேர்ந்த உஜாயிர் ஹியுமாயூன் என்பவர், சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்தில், “எனது 3 வயது மகளுக்கு அவசரமாக இருதய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. உடனடியாக விசா வழங்கி உதவி செய்ய வேண்டும். உங்களுக்கு எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன்” எனக்கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்த சுஷ்மா, உங்களின் மகள் இருதய அறுவை சிகிச்சைக்காக விசா வழங்கப்படுகிறது. விரைவில் நலம் பெற வேண்டி கொள்கிறோம்” எனக்கூறியுள்ளார்.வாழ்த்துஇதேபோல், பாகிஸ்தானை சேர்ந்த நூர்மா ஹபீப் என்பவர், ” கல்லிரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியா விஷா கேட்டு விண்ணப்பித்துள்ளோம். அவரது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
தயவு செய்து உதவுங்கள். உங்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம்” எனக்கூறியிருந்தார்.சுஷ்மா அளித்த பதிலில் ” இந்தியாவில் கல்லிரல் மாற்று சிகிச்சைக்காக உங்களது தந்தைக்கு விசா வழங்குகிறோம். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து நீண்டநாள் வாழ வேண்டி கொள்கிறோம்” எனக்கூறிள்ளார்.
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…