டிக்டாக் -ன் பிளாக் அவுட் சவாலால் கடந்த 18 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் செயலியை பற்றி அறியாமல் இருக்க முடியாது. இந்த டிக்டாக்-ன் மூலம் அனைவரும் தங்களுடைய திறமைகளை வீடியோ மூலம் வெளியிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து டிக்டாக் -ன் ப்ளாக் அவுட் சவால் “blackout challenge” என்பது மக்களிடையே தற்போது பரவி வருகிறது.
பிளாக் அவுட் சவாலானது மக்கள் தங்களால் எவ்வளவு நேரம் அவர்களது மூச்சை பிடித்து வைத்துக்கொண்டு இருக்கமுடியும் என்பதாகும். தங்களால் மூச்சி விடமுடியாத நிலையில், தோல்வியை ஒப்புக்கொள்ளும் ஒரு மரண விளையாட்டு ஆகும்.
இந்த சவாலை மேற்கொள்ளும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிலர் இறந்து விடுகின்றனர். அமெரிக்க செய்தி ஊடகமான ப்ளூம்பெர்க்(Bloomberg) நிறுவனம் அளித்த தகவலின்படி, இந்த விளையாட்டால் கடந்த 18 மாதங்களில் 20 குழந்தைகள் இறந்துள்ளனர் என்றும் அவர்களில் 5-ற்கும் மேற்பட்ட குழந்தைகள் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 2008இல் இதே சவாலை மேற்கொண்டு 80பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிக்டாக் தரப்பில் இது குறித்து கூறும்போது, இது போன்ற சவால்களை டிக்டாக் ஒருபோதும் உருவாக்குவதில்லை, பயனர்கள் தான் உருவாக்குகின்றனர் என்று கூறியது.
இந்த சவாலை மேற்கொண்டவர்கள் சிவந்த கண்கள், மற்றும் கடும் தலைவலியுடன் காணப்படுவார்கள். 2021-ல் இந்த சவாலை யாரும் மேற்கொள்ளவேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்த சீனாவின் செயலியான டிக்டாக் ஆனது, இந்திய மக்களின் தகவல்களை வெளியிடுவதாகக் கூறி, கடந்த ஜூன் 2020இல் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…