தமிழகம் மற்றும் புதுவையில் நாளை தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நாளை +2 பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ளது. இந்த தேர்வை தமிழகத்தில் மட்டும் 8 லச்சத்து, ஆயிரத்தி 401 மாணவர்கள் மற்றும் புதுவையில் 14ஆயிரத்தி 958 மாணவர்கள் இந்த பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். முதல் நாளான நாளை, மொழிப்பாடம் நடைபெறவுள்ளது.

மேலும், இந்தாண்டு மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வுகளை எழுதவுள்ளனர். 600 மதிப்பெண்களுக்கு நடக்கும் இந்த தேர்வு, காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 1.15 வரை நடைபெறும். 3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு, மார்ச் 24ஆம் தேதி முடிவடைகிறது.