பெங்களுருவில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் பலி, 3 பேர் காயம்!.

கர்நாடக மாநிலம் பெங்களுருவில், கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

பெங்களூரு நகரின் மகாதேவபுரா பகுதியில் ஹூடி என்ற இடத்திற்கு அருகே கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலியானவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். கிராஃபைட் இந்தியா தொழிற்சாலைக்கு அருகில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தை இடித்து நொறுக்க அந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

இந்த சம்பவம் நேற்று காலை 5:30 மணியளவில் நடந்தது எனினும் மற்ற தொழிலாளர்கள் அந்த இடத்திற்கு சென்ற பின்பு தான் கட்டிடம் இடிந்த விஷயம் தெரிய வந்தது. தொழிலாளர்கள் கட்டிடத்தின் தரை தளத்தில் தூங்கினர், மேலும் கனமழை பெய்ததால், அவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்தனர். அலட்சியப்போக்கின் காரணமாக விபத்து நடந்துள்ளது என கட்டிடத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

author avatar
Muthu Kumar

Leave a Comment