இங்கிலாந்தில், பக்கிங்ஹாம்ஷையரின் அய்லெஸ்பரி எனுமிடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பழங்கால பொருட்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வந்தனர். அப்போது அவர்களுக்கு ஓர் குழியில் நீர் உள்ள இடத்தில் நான்கு கோழி முட்டைகள் கிடைத்தன. அவைகள் 1,700 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த முட்டை ரோமானியர்கள் காலத்தில் புழங்கப்பட்ட கோழிமுட்டை என கூறப்பட்டுள்ளது. அதனுடன் கூடைகளில் ரோமானியர்கள் புழங்கிய சில பொருள்கள் இருந்துள்ளன. டஜன் கணக்கில் நாணயங்கள், காலணி, மறக்கருவிகள் இருந்துள்ளன. ரோமானியர்கள், பாதாள உலக கடவுளுக்காக இப்படி கூடைகளில் பொருட்களை வைத்து வீசி சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கண்டுபிடித்த 4 முட்டைளில் மூன்று முட்டைகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எடுக்கும்போது உடைந்துவிட்டது. அதனால் அங்கு பெரிய துர்நாற்றம் வீசியதாம். மீதமுள்ள ஒரு முட்டையை பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். இதே போல இங்கிலாந்தில் உள்ள ரோமானியர்களின் கல்லறைகளில் கோழி எலும்பு கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரோமானியர்கள் கோழி முட்டை மீது, அடுத்த ஜென்மம் மற்றும் கருவுறுதல் தொடர்பான நம்பிக்கை வைத்து இருந்தனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…