நேபாள நாட்டில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அதில் அடித்து சென்றவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அங்கிருக்கும் இந்திரவதி மற்றும் மேலம்சி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த புதன்கிழமை பெய்த கனமழையால் அங்கிருக்கும் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவம் ஈடுபட்டு வருகிறது. அதில் 16 பேரின் உடல் கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 22 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.