பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு தொடர்பான ஆலோசனையில் ஈடுப்படவுள்ளார்.
கொரோனா வைரஸ் சூழலுக்கு மத்தியில் சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு மற்றும் மாநில 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அனைத்து மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்கள், கல்வித்துறைச் செயலாளர்கள் மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதற்கிடையில், சிபிஎஸ்சி பொதுத்தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தங்கள் பதிலை இரண்டு நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த வழக்கு என்பது நாளை மறுநாள் மீண்டும் விசாரணைக்கு வரயுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை ஈடுபட இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபடயுள்ளார்.
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…
Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…
Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…