#BREAKING: +12 பொதுத்தேர்வு- 60 % பேர் ஆதரவு..?

தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வை நடத்த கருத்து கேட்பில் 60 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 12 வகுப்பு தேர்வு மதிப்பெண்களை வைத்து தான் மாணவர்களின் எதிர்கால நிர்ணயிக்கப்படும் என்பதால் அரசு தேர்வை ரத்து செய்யுமா..? அல்லது மீண்டும் ஒத்திவைக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் கருத்துக்கேட்பு நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, இன்றும் நாளையும் … Read more

#BREAKING: +12 பொதுத்தேர்வு -பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை..!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு தொடர்பான  ஆலோசனையில் ஈடுப்படவுள்ளார். கொரோனா வைரஸ் சூழலுக்கு மத்தியில் சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு மற்றும் மாநில 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அனைத்து மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்கள், கல்வித்துறைச் செயலாளர்கள் மத்திய கல்வி துறை அமைச்சர்  ரமேஷ் பொக்ரியால் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்கிடையில்,  சிபிஎஸ்சி பொதுத்தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய … Read more

12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. சிபிஎஸ்இ விளக்கம்..! 

12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களில் சிலர் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக் கோரி வருவதால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு முடிவும்  எடுக்கப்படவில்லை எனவும் இந்த விஷயத்தில் எடுக்கப்பட்ட … Read more

+2 தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது; கண்டிப்பாக நடத்தப்படும்.! – அமைச்சர் அன்பில் மகேஸ்.!

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 15 அல்லது ஒரு மாதத்திற்கு முன்பாகவே பிளஸ் டூ தேர்வு தேதியை அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும். தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வியாளர்களின் ஒருமித்த கருத்து எனவும் … Read more