ரூ. 531 கோடியில் கோடை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிறப்பு திட்டம்!அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,தமிழகத்தில், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, 531 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிறப்பு செயல்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் குறித்து, சென்னை பனகல் மாளிகையில் ஆய்வு செய்த பின், பேசிய அவர், அனைத்து ஊரக பகுதிகளிலும் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றார்.

வரும் டிசம்பர் மாதம் வரை, சென்னைக்கு தேவைப்படும் அளவுக்கு, 3.66 டி.எம்.சி. தண்ணீர், சுற்றுப்புற நீர்த்தேக்கங்களில் இருப்பதாக, அமைச்சர் வேலுமணி மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment