கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் சில அரசியல் கட்சிகள் மட்டும் தேவையற்ற விமர்சனம் செய்வதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.நாகை சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடத்தை அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி,பெஞ்சமின் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியும் உடனிருந்தார்.
நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவுகள் அந்தந்த மையங்களில் தயாரிக்கப்பட்டாலும் நாகை ஒருங்கிணைந்த மையத்தில் தயாராகும் உணவு மாவட்டம் முழுவதும் அனுப்பப்படுகிறது.இந்த நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக தயாரித்து அனுப்பப்படுகிறதா என்பதை அமைச்சர்கள் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். உணவு தயாரிப்பதற்காக வாங்கப்பட்ட காய்கறி,அரிசி போன்றவையும் தரமாக இருக்கிறதா எனவும் அவர்கள் கேட்டறிந்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கஜா புயல் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சில அரசியல் கட்சிகள் தேவையற்று அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
DINASUVADU.COM
IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…
சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…
சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…
சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…
Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…