தேர்தல் சம்பந்தமான செய்தி சேகரிக்க தூர்தர்ஷன் ஊழியர்கள் சத்தீஸ்கர் சென்றிருந்தனர்.
சத்தீஸ்கர் பகுதியில் நகசல் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஒரு கேமரா மேன் உயிரிழந்துள்ளார். மேலும், அந்தத் தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் தண்டேவாடா பகுதியில் தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியின் அரண்பூர் காட்டில் தான் நடந்துள்ளது. “எங்கள் குழுவினர் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக அங்கு சென்றிருந்தது. அவர்களுடன் தூர்தர்ஷன் தொலைக்காட்சி குழுவினரும் இருந்தனர்” என்று டி.ஐ.ஜி சுந்தர் ராஜ் தெரிவித் துள்ளார்.உயிரிழந்தது அச்சுதானந்த் என்று தூர்தர்ஷன் கேமரா மேன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, சத்தீஸ்கரில் உள்ள பிஜாப்பூரில் சி.ஆர்.பி.எப்-யைச் சேர்ந்த நான்கு படை வீரர்கள் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மற்றும் இரண்டு சி.ஆர்.பி.எப் படைவீரர்கள் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.சத்தீஸ்கரின் 90 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவிருக்கிறது. நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்திய பகுதி தேர்தலின் முதல் கட்டத்தில் நடைபெறுகிறது.
நேற்று சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டிருந்த மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ” கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாவோயிஸ்ட் தாக்குதல் 150-இல் இருந்து 78-80-ஆக குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…