Categories: Uncategory

போட்டியின்றி காங்கிரஸ் கட்சி தலைவரானார் ராகுல்காந்தி

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி, 1998-ம் ஆண்டு முதல் 19 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வருகிறார். அவருக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை தலைவராக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீர்மானித்தனர்.

ஆதலால், காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம், ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை முன்மொழிந்து அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மனுவை தாக்கல் செய்தனர்.

இதன் பிறகு நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. ராகுல் காந்திக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட 89 மனுக்களும் தகுதியானவையாக இருந்ததால், அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன. இத்தகவலை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரிவு தலைவர் முள்ளபள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும், ராகுல் காந்தியை தவிர, வேறு யாருக்கும் ஆதரவு மனுக்கள் வரவில்லை. ராகுல் காந்தி மட்டுமே கட்சித்தலைவர் பதவிக்கு ஒரே வேட்பாளராக இருக்கிறார். ஆதலால் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

இருந்தாலும், மனுக்களை வாபஸ் பெற 11-ந் தேதி கடைசி நாள் என்பதால்,  அன்றுதான், காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சிகாரர்கள் தெரிவித்தனர்.

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

33 seconds ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

16 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

27 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

30 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

59 mins ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago