நாளை மானியக் கோரிக்கைகளுக்காக தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

நாளை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மானியக் கோரிக்கைகளுக்காக தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. ஜூலை 9ம் தேதி வரை  23 நாட்களுக்கு இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கலுக்குப் பின், ஏப்ரல் 22ம் தேதி வரை விவாதம் நடைபெற்ற பின்னர்  கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்து.  துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த சட்டப்பேரவைக் கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது.

அரசுக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால் இந்த கூட்டத்தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment