உயர்நீதிமன்ற உத்தரவை மீறித் தூத்துக்குடி அருகே முழுக்கட்டணம் பெற்ற சுங்கச்சாவடியை லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கான் என்கிற நிறுவனம் புதூர் பாண்டியாபுரம், எலியார்பத்தி ஆகிய 2 இடங்களில் சுங்கச் சாவடி அமைத்து அவ்வழியாகச் செல்லும் வாகனங்களுக்குக் கட்டணம் பெற்று வருகிறது.
இந்தச் சாலையை முறையாகப் பராமரிக்கவில்லை எனப் புகார் வந்ததால் மதுக்கான் நிறுவனத்துக்குத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நூறு கோடி ரூபாய் தண்டம் விதித்தது. இதனிடையே நெடுஞ்சாலையைச் சரியாகப் பராமரிக்காவிட்டால் பாதிக்கட்டணம்தான் பெற வேண்டும் எனத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இதை மீறித் தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு முழுக் கட்டணம் பெற்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் சுங்கக் கட்டணத்தை மீண்டும் பாதியாகக் குறைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…